February 22, 2014

எல்லா மனிதர்களுக்கும் நாட்டின் மீது பற்று உள்ளது

எல்லா மனிதர்களுக்கும் நாட்டின் மீது பற்று உள்ளது.

தினமும் வேலை செய்தால்தான் வாழ முடியும் என்ற நிலையில் 

இருக்கிறார்கள் சாமான்ய மக்கள்.நாட்டில் நடக்கும் இன்னல்களை 

தட்டி கேட்க இவர்களுக்கு நேரம் இல்லை.அப்படியே நினைத்தாலும் 

அதற்க்கு வேலை செய்யும் நிர்வாகம் விடுவதில்லை.மீறி செய்தால் 

வேலை இல்லை.அதற்காக,நம்முடைய இந்த எண்ணங்களை

நிறைவேற்ற உருவாக்கப்பட்டதே அரசியல்.அதற்க்காகதான்

ஐந்து வருடத்திற்க்கு ஒருநாள்,நம் வேலையை விட்டு

வாக்களிக்கிறோம்.ஆனால் அரசியல் செய்பவர்கள் அரசியலை நல்ல

லாபம் தரும் தொழிலாகவே கருதுகிறார்கள்.

அவர்கள் வேலையே சரியாக செய்வதில்லை அதற்க்கு காரணம்?

முதலாலியான நாம் சரி இல்லை.ஓசியில் வாங்கி கேள்வி கேட்க

முடியாமல் வாயடைத்து நிற்க்கிறோம்.நம்முடைய பொருளை

நாமே காசு கொடுத்து வாங்கும் ஒரே மக்கள் நாமாகத்தான் இருக்கும்.

இதை சரி செய்ய அவர்கள்,பேருந்து,மற்றும் பொருட்களின்

விலைவாசியை ஏற்றுகிறார்கள்.இலவசமாக வாங்கும் பொருளைவிட

ஐந்து வருடத்துக்கு நாம் வாங்கும் பொருளின் செலவை வைத்து

பார்த்தால்,அவர்கள் தருவதைவிட ஆயிரம் மிக்சி,கிரைண்டர்,டிவி,

வாங்கலாம்.இப்படி இருக்க, நாம் போராட்டம் செய்தாள் அவர்கள்

எப்படி மதிப்பார்கள்.முதலில் அவர்கள் நம்மை பார்த்து

மரியாதையும்,பணிவும், தர நாம் வழி செய்யவேண்டும்.

அதற்க்கான நாள் வெகுதூரமில்லை...................................!!!!!!!!

No comments: