நம்ம நாட்டுக்கு காந்தி சுதந்திரம் வாங்கி தந்தது உண்மைதான்.
ஆனா காந்தியால கிடைக்கவில்லை.ஹிட்லர் இங்கிலாந்தில் போரிட்டு அந்த நாட்டு வீரர்களை கொன்று குவித்தார்.அங்கு வீரர்கள் பற்றாகுறை ஏற்ப்பட்டதால் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் வெளியேறும் நிலைமை ஏற்பட்டது.எனவே அவர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.இதுதான் உண்மை.வரலாறு மிகவும் தவறானது.ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்தியாவில் ஏன் பிறந்தோம் என்று வருந்துவதற்கு காரணம் இந்த சுதந்திரம்.
நம் முன்னோர்கள் நல்லது நடக்கும் என்று போராடி இருப்பார்கள்.
சுதந்திர தியாகிகள் யாரவது இப்போது இருந்தால் நிச்சயமாக தற்போதைய நிலைமையை எண்ணி வருந்துவார்கள்.எங்கும் ஊழல்,எதிலும் ஊழல்.வேலை கிடைப்பதில் இருந்து விளையாட்டு துறை வரைக்கும் அரசியல்வாதிகளின் பேயாட்டம்.திறமைக்கு ஏது இங்கு மரியாதை?பணம் இருந்தால் மட்டுமே இந்தியாவில் திறமையையும் வெளிக்கொண்டுவர முடியும்.இங்கு மாற்றத்தை இந்திய இளைய சமுதாயத்தால் மட்டுமே கொண்டு முடியும்.ஆனால் அவர்களில் பலரும் ரசிகர்கள் என்ற பெயரில் மாலைபோடுவது,
பாலபிசேகம் பண்ணுவது என்று அழிந்துபோய் கிடக்கிறார்கள்.
ஏன் இப்படி நடிகர்களையும்,விளையாட்டு வீரர்களையும் தலைமேல் தூக்கி வைத்து ஆடுகிறீர்கள்?உங்களுக்கு வாய்ப்பு தந்தால் உங்களாலும் அவர்கள் செய்த சாதனையை செய்ய முடியும்.அவர்கள் ஒருநிமிடம் நடிக்கும் தொலைக்காட்சி விளம்பரத்துக்கு கோடி கோடியாக பணம் வாங்குகிறார்கள்.ஐம்பது வருடம் உழைத்தால் கூட உங்களால் அந்த பணத்தை சம்பாதிக்க முடியாது.இதுதான் உண்மை.அரசியல்வாதிகள் நம்ம காச கொள்ளையடிச்சு நமக்கே படம் போட்டு காட்டுறாங்க.அதையும் காசுகொடுத்து பார்த்து விசிலடிக்கும் தமிழனுக்கு எங்கே வரபோகிறது தமிழ் உணர்வு.கேட்டால் தமிழன் என்று பீத்தி கொள்வது.நீங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்கையை மாற்றினால் மட்டுமே எல்லாவற்றிலும் மாற்றம் நாடாகும்.திருவள்ளுவர்,விவேகனந்தர் சொல்லியே நாம கேட்ட்க மாட்டோம்.இதுலாம் எம்மாத்திரம்.எல்லாம் அவன் செயல்.
.தமிழன் என்று சொல்லுடா தலை குனிந்து நில்லடா !!!! By #RP