July 11, 2013
கிராமங்களில் ஆத்திர அவசரத்துக்கு வங்கிகளில் காதில் கைகளில் இருக்கும் நகைகளை வங்கியில் அடகுவைத்து கடன் பெறுவார்கள், விவாசயம் முதல் வீட்டு விசேஷம், எதிர்பாராத மருத்துவ செலவுகளுக்கு கிராம மக்கள் இந்த வங்கிகளின் கடனையே நம்பி இருந்தனர், தனியார் அடகு கடைகளை விட குறைந்த வட்டி என்பதும் நம்பிக்கையானது என்பதாலும் ஏழை மக்கள் இதை நம்பினார்கள். சரிந்துவரும் இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்துகிறேன் என்று கூறி கிராமப்புற வங்கிகள் இனி, தங்க ஆபரணங்கள் மற்றும் நாணயங்களைப் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாக கடன் அளிக்கக்கூடாது என்று ஆர்பிஐ, கிராமப்புற வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது. இது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். பணமுதலைகள் ஒளித்துவைத்துள்ள கருப்பு பணத்தை பிடியுங்கள், பெரும் பணக்காரர்களிடம் கடனை வசூலியுங்கள், பணக்காரர்களின் வரி பாக்கியை வசூலித்து ரூபாயின் மதிப்பை உயர்த்துங்கள், இது போன்று ஏழைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள். |
Subscribe to:
Posts (Atom)