August 31, 2016

செல்வந்தனும் அவன் நாயும்

ஒரு ஊரில் செல்வந்தன் ஒருவன் இருந்தான் அவன் செல்லமாக ஒரு நாயை வளர்த்தான். நாயும் அவனிடம் மிகவும் பரிவுடன் இருந்தது.அந்த நாய்க்கு தெருவில் உள்ள ஒரு நாயோடு நடப்பு ஏற்பட்டது. ஆனால்  செல்வந்தன் வீட்டு நாயால் வெளியே சென்று தெரு நாயுடன் விளையாட முடியவில்லை. அதனால் செல்வந்தன் வீட்டு நாயும் சோகமாக இருந்தது. தெருநாய்க்கும் ஒருநாள் கூட தன் நண்பனுடன் சந்தோஷமாக விளையாட முடியவில்லையே என்ற வருத்தம்.
இதை கவனித்த அந்த செல்வந்தன் தன் நாயிடம் உனக்கு தேவையான எல்லாமே நான் செய்கிறேன். ஆனால் நீயோ அந்த தெரு நாயிடம் விளையாட ஆசைப்படுகிறாயே! அதில் என்ன உனக்கு சந்தோசம் கிடைக்க போகிறது என்றான். அதை கேட்ட அந்த நாய் அவனிடம் நீங்களும்தான் பெரிய வீடு,வாகனம்,செல்வம்,பதவி என்று எல்லாம் வைத்துளீர்கள் பிறகு ஏன் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று கேட்டது.
அதை கேட்ட செல்வந்தன் அதிர்ந்து போனான். மகிழ்ச்சி என்பது நமக்கு பிடித்ததை செய்வதிலும், நமக்கு பிடித்தவர்களுடனும், நம்மை பிடித்தவர்களுடனும் இருந்தால் மட்டுமே கிடைக்கும்.  

No comments: